ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கேதார கவுரி விரத பூஜையில் பக்தர்கள் பங்கேற்க தடை

Published On 2021-11-02 13:34 IST   |   Update On 2021-11-02 13:34:00 IST
இந்த ஆண்டு 4-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த ஆண்டை போல் கேதார கவுரி விரத பூஜை கொரோனா தொற்றுப் பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக கோவில் சார்பில் நடத்தப்பட உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி கேதார கவுரி விரத பூஜை கோலாகலமாக நடப்பதும், அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவதும் வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் சார்பாக கேதார கவுரி விரத பூஜை நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு 4-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த ஆண்டை போல் கேதார கவுரி விரத பூஜை கொரோனா தொற்றுப் பரவலால் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக கோவில் சார்பில் நடத்தப்பட உள்ளது. அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News