தோஷ பரிகாரங்கள்

குழந்தை வரம் அருளும் புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன்

Published On 2022-12-17 08:05 GMT   |   Update On 2022-12-17 08:05 GMT
  • தென்காசி கடையநல்லூர் தாலுகாவில் உள்ளது இந்த கோவில்.
  • ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

உலகமே சக்தி மயமானது என்பதை மனிதர்களுக்கு உணர்த்தும் ஆன்மீக சொருபங்கள். இத்தகைய அருட் திறம் வாய்ந்த ஆலயங்களில் ஒன்று தான் தென்காசி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடைய நல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மருத்துவமனை அருகில் கோபுர நகரில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.

இக்கோவிலில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் அம்மாக்களிடம் குழந்தை வரம் வேண்டி வரும் கன்னியர்களுக்கும், நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களுக்கும் இக்கோவிலில் வளையல், குங்குமம் வளைகாப்பும், 21 வகையான சாதங்களும், பிரசாதமாக வழங்கப்படும். இந்த அருட்பிரசாதத்தை பெற்றவர்களுக்கு குழந்தைச்செல்வம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் கொடுக்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதத்தை 'ஜெய்பவானி' என்று சொல்லி நெற்றியில் பூசிக் கொண்டால் அனைத்து செயல்களும் நன்மையாக நடக்கும்.

Tags:    

Similar News