தோஷ பரிகாரங்கள்

இந்த கோவிலில் வழிபட்டால் 16 வகையான சாபங்களும் தோஷங்களும் நீங்கும்

Published On 2022-07-09 01:32 GMT   |   Update On 2022-07-09 01:32 GMT
  • இந்தத் தலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • இந்த கோவில் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருக்கிறது.

வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் நடத்தப்படுகிறது.

என்றாலும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என அமர்க்களப்படும். நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் நீடாமங்கலம் சிவாலயத்தில் ஒன்று திரண்டிருப்பார்கள்.

காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தால் பித்ரு தோஷங்கள் உள்பட 16 வகையான சாபங்களும் தோஷங்களும் விலகும், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Tags:    

Similar News