தோஷ பரிகாரங்கள்

பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ள கருங்காலி மாலைகள்.

திருமண தடைகளை நீக்கும் கருங்காலி மாலை

Published On 2022-11-23 07:31 GMT   |   Update On 2022-11-23 07:31 GMT
  • கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  • இந்த மாலையை பெறுவதற்கு 98425 99006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நவக்கிரக நாயகர்களில் செவ்வாய் பகவானுக்குரியதாக விளங்கும் கருங்காலி மாலை அணிவதன் மூலம் தடங்கல்கள் நீங்கி அனைத்து காரியமும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த கருங்காலி மாலையானது அதிக உறுதி தன்மை கொண்ட மரத்தில் இருந்து மணிகளாக செதுக்கி, 108 மணிகளை கொண்டு மாலையாக தயாரிக்கப்படுகிறது. இது கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் சக்தி படைத்தது.

இத்தகைய சிறப்பு பெற்ற கருங்காலி மாலை ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ராட்டை சுற்றிபாளையம் காங்கேயம் மெயின்ரோட்டில் உள்ள பைரவர் கோவில் வளாகத்தில் செயல்படும் பைரவா பவுண்டேசனில் கிடைக்கிறது.

இதுகுறித்து பவுண்டேசன் நிர்வாகி விஜயசாமிகள் கூறியதாவது:-

கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாலை முறைப்படி பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மாலையை தொடர்ந்து அணிந்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்வின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைந்து உள்ளது. குறிப்பாக தொழிலில் வெற்றி இலக்கை எட்ட வேண்டுமென்றால் இந்த கருங்காலி மாலையை அணிந்து கொள்ளலாம்.

அனைவரது வாழ்க்கைக்கும் அடித்தளமாக உறவுகள் அமையும். தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர்கள் என உறவினருடன் எந்தவொரு பெரிய பிரச்சினையும் ஏற்படாமல் சந்தோஷமாக வாழ்வதற்கு கருங்காலி மாலை வழிவகுக்கிறது. மேலும், வணிக தொடர்பு கொண்ட உறவின் வளர்ச்சிக்கும் சிறப்பு வாய்ந்தது.

பைரவரின் ஆசீர்வாதம் கிடைப்பவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவரது ஆசீர்வாதத்தை பெறுவதற்கான மிக எளிய வழியாக கருங்காலி மாலை உள்ளது. இதை கழுத்தில் அணிவது மூலமாக அவரது ஆசீர்வாதத்தை பெறலாம். இதன் மூலமாக பைரவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும்.

நவக்கிரகங்களில் மிக வலுவானதாகவும், வேகமானதாகவும் செவ்வாய் கிரகம் உள்ளது. அந்த கிரகத்துக்குரிய மாலையாகவும் கருங்காலி மாலை திகழ்கிறது. இந்த மாலையை அணிந்திருந்தால் பிரச்சினைகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவராக விளங்கலாம். மன உறுதி அதிகமாகும். இறைவனுக்கு ஸ்லோகங்கள் சொல்லவும் பயன்படுத்தலாம். இறை ஆகர்ஷண சக்தி அதிகமுள்ள கருங்காலி மாலை பயன்படுத்துவதால் உடலில் உள்ள பிரச்சினை நீங்குவதோடு தன வசியம், வாழ்வில் முன்னேற்றம், குல தெய்வ அருள் கிடைக்கும். துன்பங்கள் மறையும். செல்வவளம் பெருகும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும். மனக்கசப்புகள் அகலும். சகல கிரக தோஷ நிவர்த்தி உண்டாகும்.

கருங்காலி மாலை அணிந்து இருந்தால் உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும். உடல் உறுதியடைய செய்யும். கோபங்கள் சிறிது சிறிதாக குறையும். நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பெண்களில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலையை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும். கணவன்-மனைவி பிரச்சினை நீங்கி உறவு மேம்படும். வறுமை நீங்கும்.

மகத்தான நன்மைகள் நிறைந்த கருங்காலிமாலையை நமது பைரவ பீடத்தில் முறைப்படி பூஜை செய்து, மந்திரங்களால் உரு ஏற்றி வழங்கப்படுகிறது. எனவே இந்த மாலையை அணிந்து பைரவரின் முழு அருளையும் பெற்று சந்தோஷமாக வாழலாம். இந்த மாலையை பெறுவதற்கு 98425 99006 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News