தோஷ பரிகாரங்கள்

இந்த கடுகு பரிகாரத்தை 3 வாரம் செய்தால் கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும்...

Published On 2023-03-16 06:35 GMT   |   Update On 2023-03-16 06:35 GMT
  • இந்தப் பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் பலன் தெரிவதை காணலாம்.
  • வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

பணம் என்றால் பிரச்சனை தான். இந்த பண பிரச்சனையில் இருந்து தப்பிக்க கடன் சுமையிலிருந்து வெளிவர ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்கலாம்.

நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் ஒரு தனி அறையில் அல்லது வரவேற்பறையில் கூட தனியாக படுத்துக் கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு நின்று உங்கள் தலையை சுற்றிய வெண்கடுகை நீங்கள் படுகின்ற இடத்தில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு விடுங்கள்.

நடுவே பாய் தலையணை மெத்தை போட்டுக் கூட படுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். மறுநாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக பல் தேய்த்து முகம் கழுவி விட்டு உடனடியாக ஒரு துடைப்பத்தை வைத்து இந்த வெண்கடுகை எல்லாம் கூட்டி அள்ளி ஒரு பேப்பரில் வைத்து மடித்து ஒரு அகல் விளக்கில் கொட்டி அதில் ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி விடுங்கள். நெருப்பில் இந்த வெண்கடுகு எல்லாம் படபடவென எரிந்து முடிந்துவிடும்.

இந்தப் பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் உங்களுடைய கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும். வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எந்த கிழமையில் செய்தாலும் சரி. ஏழு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று முறை இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உதாரணத்திற்கு இந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை மூன்று கிழமைகள், அதே ஞாயிற்றுக்கிழமையில் பரிகாரம் செய்யப்பட வேண்டும். நிச்சயமாக வாங்கிய கடனை திருப்பித் தரக்கூடிய நேரம் காலம் உங்களுக்கு கைகூடி வரும்.

இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால் கடன் பிரச்சனை நீங்காது. கடனை திருப்பித் தர என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை நீங்கள் செய்ய வேண்டும். கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். முயற்சிகளில் வரும் தடைகள் நீங்கி உங்கள் கைக்கு பணம் வருவதில் இருக்கும் சிக்கல்கள் தீரும். சிக்கல்களை சரி செய்ய தான் பரிகாரமே தவிர, மந்திரம் போட்டால் மாங்காய் என்றைக்குமே வராது.

Tags:    

Similar News