தோஷ பரிகாரங்கள்
அழகிரிநாதர் கோவில்

திருமணத் தடை நீக்கும் கோட்டை அழகிரிநாதர்

Published On 2022-05-19 05:49 GMT   |   Update On 2022-05-19 05:49 GMT
சேலம் மாநகரில் உள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிரிநாதர் கோவில், வரலாற்று சிறப்பு மிக்க வைணவத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிரிநாதர் கோயில், வரலாற்று சிறப்பு மிக்க வைணவத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சேலத்தில் உள்ள வைணவ கோயில்களுக்கு எல்லாம் தலைமையாக கருதப்படுவது கோட்டை அழகிரிநாதர் கோயில்.

இத்திருத்தலம் கோட்டை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமணம் நடைபெற்ற கோயிலாகும். இங்குள்ள அழகிரிநாதர் திருமண கோலத்தில் காட்சியளிப்பதால் திருமணமாகாத ஆண், பெண் கோட்டை அழகிரிநாதரை மனமுருகி வேண்டிக் கொண்டால் திருமண தடை விலகும்.

குழந்தை பேறு, நோய், நொடி இல்லாமல் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது ஆண்டாண்டு காலமாய் அழகிரிநாதரை வழிபடும் பக்தகோடிகளின் நம்பிக்கை.

Tags:    

Similar News