தோஷ பரிகாரங்கள்
சிவலிங்கம்

தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்

Published On 2022-04-23 14:14 IST   |   Update On 2022-04-23 14:14:00 IST
பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
* லிங்கோத்பவர் - முக்தி கிடைக்கும்

* திரிமூர்த்தி - குழந்தைப்பேறு அமையும்

* கல்யாண சுந்தரர் - திருமண பாக்கியம் வந்துசேரும்

* சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்

* கங்காதரர் - பாவங்கள் விலகும்

* நடேசர் - மகப்பேறு கிட்டும்

* சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்

* ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்

* நீலகண்டர் - விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.

* ஹரிஹர மூர்த்தி - வழக்குகள் வெற்றியாகும்.

* ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

* உமாசகாயர் - துணையின் உடல்நலம் சீராகும்

* அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்

* தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

* சோமாதி நாயகர் - சகல சவுபாக்கியமும் கிடைக்கும்

* சோமாஸ்கந்தர் - பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்

* சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்

* வீரபத்திரர் - எதிரி பயம் விலகும்

* காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது

* காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்

* கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்

* திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது

* பிட்சாடனர் - மோக மாயை விலகும்

* ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்

* சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்

* பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்.

Similar News