தோஷ பரிகாரங்கள்
சிவன் அபிஷேகம்

மாத பவுர்ணமி அபிஷேகமும்... தீரும் பிரச்சனைகளும்...

Published On 2021-12-18 10:45 IST   |   Update On 2021-12-18 10:45:00 IST
ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள்கள் உண்டு. ஐப்பசி மாதத்து பவுர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல, ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மாதம் மற்றும் அபிஷேகப் பொருள்கள், அதன் பலன்கள் விவரம்:

சித்திரை பவுர்ணமி : மரிக்கொழுந்து - புகழ்
வைகாசி : சந்தனம் - மனை, வீடு, நீலம், புதையல்
ஆனி : முக்கனி (மா, பலா, வாழை) - கேட்ட வரம் கிட்டும்
ஆடி : காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி : வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம், பாவம் நீங்கும்
புரட்டாசி : கோதுமை பசு நெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி : அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை : பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி : பசு நெய் நறுமண வென்னீர் - கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை : கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி : பசு நெய்யில் நனைத்த கம்பளி - குழந்தை பாக்கியம்
பங்குனி : பசுந்தயிர் - மனைவி, மக்கள், உறவினர் உதவி

Similar News