தோஷ பரிகாரங்கள்
சிம்மகுளத்தில் இருந்த தீர்த்தநீரை கொப்பரையில் வைத்து பக்தர்கள் மீது தெளித்த காட்சி(பழையபடம்)

விரிஞ்சிபுரம் கோவில் கடை ஞாயிறு விழா: குழந்தை வரம் வேண்டி பெண்கள் சிம்ம குளத்தில் நீராட தடை

Published On 2021-12-09 04:16 GMT   |   Update On 2021-12-09 08:38 GMT
சிம்மக்குளம், சூரிய தீர்த்தம் (பாலாறு) மற்றும் பிரம்மக்குளம் தீர்த்தம் ஆகியவற்றில் பெண்கள் நீராடி குழந்தை வரம் வேண்டி கோவிலில் இறைவன் முன்படுத்து உறங்கி ஆண்டு தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைஞாயிறு திருவிழா வருகிற 12-ந் நடைபெறவுள்ளது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிம்ம குளம் திறப்பு 11-ந் தேதி நள்ளிரவு திறக்கப்படுகிறது.

சிம்மக்குளம், சூரிய தீர்த்தம் (பாலாறு) மற்றும் பிரம்மக்குளம் தீர்த்தம் ஆகியவற்றில் பெண்கள் நீராடி குழந்தை வரம் வேண்டி கோவிலில் இறைவன் முன்படுத்து உறங்கி ஆண்டு தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.

இந்த திருவிழாவையொட்டி அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 11-ந் தேதி முதல் சிம்மக்குளம் உள்ளிட்ட நீர்நிலை தீர்த்தங்களில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் உள்ளதாலும், இந்த பெருந்தொற்று நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 2 நாட்கள் திருவிழாவில் பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய இணையவழி மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

பொது தரிசனம் செய்ய விருப்பமுள்ளவர்கள் www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

மேற்படி தரிசனமானது 1 மணி நேரத்திற்கு 180 பக்தர்கள் வீதம் ஒரு நாளைக்கு 3000 பக்தர்கள் 6.30 முதல் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வயதானவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி ஒரு தவணையாவது செலுத்தாதவர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூக்கள் ஆகியவற்றை எடுத்துவர அனுமதி இல்லை. கோவிலில் தீர்த்தம், விபூதி மற்றும் குங்குமம் போன்ற எவ்வித பிரசாதங்களும் வழங்கப்படமாட்டாது.

இந்து சமய அறநிலையத் துறை மூலம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நோய் பரவல் தொற்று தடுப்பதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News