தோஷ பரிகாரங்கள்

20 அம்மன்கள்... தீர்க்கும் 20 வகை துன்பங்கள்

Published On 2022-09-16 06:26 GMT   |   Update On 2022-09-16 06:26 GMT
  • புதுக்கோட்டை நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் திருவருள் புரிகிறாள்.
  • கரூர் மாரியம்மன் காணாமல் போன பொருட்கள் திரும்பக்கிடைக்க அருள்கிறாள்.

1. விருதுநகர் : விருதுநகரில் உள்ள இருக் கன்குடி மாரியம்மன் சிவாம் சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்குமுன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண்நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷே கம் செய்த நீரால் கண்களைக் கழுவினால் நோய் நீங்குகிறது.

2. மதுரை : மதுரை சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்தினால் நோய் மறைகிறது.

3. மதுரை- எல்லீஸ் : மதுரை- எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம் மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள்.

4. புதுக்கோட்டை : புதுக்கோட்டை நார்த்தா மலையில் முத்துமாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீருகிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.

5. நீலகிரி : நீலகிரி, குன்னூரில் தந்தி மாரியம்மன் அருளாட்சி புரி கிறாள். தண்ணீர் பஞ்சம் ஏற் பட்டால் இந்த மாரியிடம் மன முருக வேண்டிக்கொள்ள, உட னே பெருமழை பெய்கிறது.6. ஊட்டி : ஊட்டியில் மகாமாரி, மகா காளி இருவரும் ஒரே கருவறை யில் அருள்கின்றனர். இங் குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றன.

7. நாமக்கல் -ராசிபுரம் : நாமக்கல்- ராசிபுரத்தில் நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப்பேறு கிட்டுகிறது.

8. கோவை : கோவையில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.

9. சமயபுரம் : சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக் கடனாகச் செலுத்துகிறார்கள்.

10. மணப்பாறை : திருச்சி மணப்பாறையி லுள்ள மாரியம்மன் கோவிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிட்டுகிறது.

11. திருப்பூர் : கோடீஸ்வரிமாரி என்ற கோட்டைமாரி திருப்பூரில் அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இருபுறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும் அம்மனைப் போலவே சுயம்பு வாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு.

12. தேனி -பெரியகுளம் : தேனி-பெரிய குளத்தில் உள்ள கவுமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.

13. கரூர் : கரூர் மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக்கிடைக்க அருள்கிறாள்.

14. திண்டுக்கல் : திண்டுக்கல் -கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பித்தால், வேண்டுதல் நிறைவேறுகிறது.

15. தஞ்சை -புன்னைநல்லூர் : தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜாமன்னர் மகளின்கண்நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதா சிவப்பிரம்மேந்திரர்.

16. காரைக்குடி : காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்துமாரியம்மனுக்கு தக்காளி பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

17. உடுமலைப்பேட்டை : கோவை- உடுமலைப் பேட்டை மாரியம்மன் ஆலயத்தில், மார்கழி திருவாதிரை அன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.

18. ஈரோடு : ஈரோடு- பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள். அம்மை நோய் கண்ட அவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.

19. கோபிசெட்டிபாளையம் : கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

20. கருங்கல்பாளையம் : ஈரோடு-கருங்கல் பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அருள்கிறாள். இத்தல விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும் தண்ணீரில் கரைத்தும் அருந்தினால் நோய்கள் நீங்குகின்றன.

Tags:    

Similar News