ஆன்மிகம்
புனித அந்தோணியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

புனித அந்தோணியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2021-07-07 02:48 GMT   |   Update On 2021-07-07 02:48 GMT
புனித அந்தோணியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டை பாத்திமா நகரில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் கொரோனா 3-வது அலை வராமல் இருக்க சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிப்பட்ட பல்லக்கில் புனித அந்தோணியாரை வைத்து கிறிஸ்தவர்கள் வீதி, வீதியாக எடுத்து சென்றனர்.

அப்போது அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு பவனி வந்து ஒவ்வொரு வீட்டின் முன்பும் கொரோனா 3-வது அலை வர கூடாது என பிரார்த்தனை செய்தனர். இதில் கிறிஸ்தவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News