ஆன்மிகம்
நாம் எல்லாம் எவ்வளவுதான் பெரியவர்களானாலும் வானக தந்தையின் குழந்தைகள்.நாம் அவருக்கு கீழ்ப்படியாமல் எவ்வளவு தூரம் ஓடி போனாலும் நம்மை அரவணைக்க அவரது கைகள் எப்போதும் நீட்டப்பட்டே இருக்கின்றன.
திருப்பலி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள் அக்குடும்பத்தினர்.மூத்த பையன்கள் இருவரும் நடக்கின்றனர்..இளைய பையனுக்கு ஒன்றரை வயது.அவனை அப்பா தூக்கி வைத்து இருக்கிறார். அண்ணன்மார்களுடன் எட்டிவைத்து நடக்கவே இந்த இளைய மகனுக்கு ஆசை.அதற்காக அவன் அப்பாவின் இடுப்பில் இருந்து வலுக்கட்டாயமாக இறங்க பார்க்கிறான். சாலைகள் பரப்பப்பட்டு இருந்ததால் அவனை அப்பா நடக்க விட வில்லை.
இருப்பினும் அவன் அப்பாவின் கைகளை நெட்டி தள்ளி இறங்கத்தான் எத்தனிக்கிறான்.இறுதியில் அவனை அப்பா கீழே விடுகிறார்.அவனும் தனது அண்ணன் மார்களுடன் குடுகுடுவென ஓடினான்.ஆனால் சிறிது நேரத்தில் அவன் கால் இடறி கீழே விழுந்து ஓவென அழுதான்.உடம்பில் காயம் ஏதும் இல்லை ஆனாலும் அலறினான்.அண்ணன்மார்கள் அணைத்தார்கள் ஆயினும் அழுகையை நிறுத்தவில்லை.இறுதியில் அப்பா கைகளை நீட்ட அவன் ஓடி வந்து அப்பாவின் தோளில் ஏறிக் கொண்டான்.அப்பாவின் தோளை அடைந்த போதுதான் அவன் ஆறுதல் அடைந்தான்.
நாம் எல்லாம் எவ்வளவுதான் பெரியவர்களானாலும் வானக தந்தையின் குழந்தைகள்.நாம் அவருக்கு கீழ்ப்படியாமல் எவ்வளவு தூரம் ஓடி போனாலும் நம்மை அரவணைக்க அவரது கைகள் எப்போதும் நீட்டப்பட்டே இருக்கின்றன.அத்தகைய அன்பின் தந்தை நமக்கு இருக்க நாம் ஏன் பாவக்குழிகளை விட்டு விட்டு அவரிடம் செல்லக்கூடாது?அவரது வலிய கரங்களை அணுகிச் செல்ல ஏன் இன்னும் தாமதம்?
"ஆண்டவர் கூறுவது இதுவே :நீ திருப்பி வந்தால் நான் உன்னை முன்னய நிலைக்கு உயர்த்துவேன் "
இருப்பினும் அவன் அப்பாவின் கைகளை நெட்டி தள்ளி இறங்கத்தான் எத்தனிக்கிறான்.இறுதியில் அவனை அப்பா கீழே விடுகிறார்.அவனும் தனது அண்ணன் மார்களுடன் குடுகுடுவென ஓடினான்.ஆனால் சிறிது நேரத்தில் அவன் கால் இடறி கீழே விழுந்து ஓவென அழுதான்.உடம்பில் காயம் ஏதும் இல்லை ஆனாலும் அலறினான்.அண்ணன்மார்கள் அணைத்தார்கள் ஆயினும் அழுகையை நிறுத்தவில்லை.இறுதியில் அப்பா கைகளை நீட்ட அவன் ஓடி வந்து அப்பாவின் தோளில் ஏறிக் கொண்டான்.அப்பாவின் தோளை அடைந்த போதுதான் அவன் ஆறுதல் அடைந்தான்.
நாம் எல்லாம் எவ்வளவுதான் பெரியவர்களானாலும் வானக தந்தையின் குழந்தைகள்.நாம் அவருக்கு கீழ்ப்படியாமல் எவ்வளவு தூரம் ஓடி போனாலும் நம்மை அரவணைக்க அவரது கைகள் எப்போதும் நீட்டப்பட்டே இருக்கின்றன.அத்தகைய அன்பின் தந்தை நமக்கு இருக்க நாம் ஏன் பாவக்குழிகளை விட்டு விட்டு அவரிடம் செல்லக்கூடாது?அவரது வலிய கரங்களை அணுகிச் செல்ல ஏன் இன்னும் தாமதம்?
"ஆண்டவர் கூறுவது இதுவே :நீ திருப்பி வந்தால் நான் உன்னை முன்னய நிலைக்கு உயர்த்துவேன் "