ஆன்மிகம்
இயேசு

பாவங்களிலிருந்து விடுதலை தருகிற இயேசு

Published On 2021-05-07 07:47 GMT   |   Update On 2021-05-07 07:47 GMT
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
இந்த பூமியில் நடந்த மூன்று பெரிய சரித்திரப்பூர்வமான சம்பவங்கள், 1. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, 2. சிலுவையில் ஜீவபலியாக மரித்த சம்பவம், 3. இயேசு உயிர்த்தெழுந்தது.

இவை அனைத்தும் என்றென்றும் மாறாத, காலத்தால் அழிக்கப்படாத மகிமையான சம்பவங்கள். இதில் ஒன்று தான், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் அனைவருக்காகவும் சிலுவையில் தன்னைத்தானே ஜீவபலியாக அர்ப்பணித்தது ஆகும்.

அவர் ஜீவனுள்ள தெய்வமாயிருந்தார். அவரை எப்படி சிலுவையில் அறைந்து கொலை செய்ய முடியும்? என்ற கேள்வி எழக்கூடும். உண்மையிலேயே ரோம சேவகர்கள் தங்கள் பலத்தினால் அவரை கொலை செய்யவில்லை. மனிதகுலத்திற்காக தம்மைத்தாமே சிலுவையில் ஜீவபலியாக அர்ப்பணித்தார்.

ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்றால் நம் ஒவ்வொரு வருக்கும் பாவத்திலிருந்து விடுதலை தருவதற்காகவே.

வேதம் சொல்லுகிறது, ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது’ (ஏசாயா 53:5).

‘நம் அனைவருடைய பாவங்களையும் இயேசு சிலுவையில் சுமந்தார்’ என்று வேதம் கூறு கிறதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அதுமாத்திரமல்ல தேவன் அருளுகிற இந்த பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், சங்கீதம் 32:5-ல் தாவீது ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன்’ என்றேன். ‘தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்’ என தெளிவாக கூறுகிறார்.

ஆகவே நாம் செய்கிற தேவன் விரும்பாத அனைத்து காரியங்களையும் கர்த்தருடைய சமூகத்தில் அறிக்கையிட வேண்டும். அப்பொழுது நம்முடைய பாவத்திலிருந்து விடுதலையை கர்த்தர் கட்டளையிடுவார்.
Tags:    

Similar News