ஆன்மிகம்
கிறிஸ்துவ வழிபாடு

பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க அழைப்பு

Published On 2021-05-03 07:00 GMT   |   Update On 2021-05-03 07:00 GMT
நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்[மாற்கு:10:21]. ஐசுவரியமான தலைவனிடம்  உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடு; பின்பு என்னை பின்பற்றி  என்று இயேசு சொன்ன போது அவன் மிகுந்த துக்கமடைந்தவனாய் போனான். இங்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவன் துக்கமடைந்தான் என தன் கொள்கையை மாற்றவில்லை.

 நாம் எப்போதும் நமக்காக உலக பொக்கிஷங்களை சேர்க்கிறோம்.ஆனால் தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்க இயேசு கிறிஸ்து நம்மை அறிவுறுத்துகிறார்[லூக்கா:12:21].

ஏனெனில் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?[மத்தேயு:16:26] மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக எதையும் கொடுக்க முடியாது. பரலோகத்தின் பொக்கிஷமாகிய நம்முடைய ஆத்துமாவை எதை நஷ்டப்பட்டாகிலும் நாம் சம்பாதிக்க வேண்டும். அன்பானவர்களே நம்முடைய பொருட்கள் ஐசுவரியம் யாவும் கர்த்தர் தந்தது. அதை பிரயோஜனப்படுத்தி தேவனுக்காய் ஆத்துமாக்களை சம்பாதித்து அவர்களையும் தேவனுக்கு சீடராக்குவோம். சீஷத்துவம் ஒரு தொடர்செயல்; சீஷராவோம் சீஷராக்குவோம்.[Discipleship is a chain process. So be a Disciple and Make Disciples]

மோசே தான் உலக சந்தோஷங்களை வெறுத்து தேவனுக்காய் பொக்கிஷங்களை சேர்த்து தேவனுக்கு முன்பாக ஐசுவரியவனான். மோசேயைப் போல நாமும், தேவனை பின்பற்ற   தடையாய் இருக்கிற எல்லாவற்றையும் விட்டுவிட்டு பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து தேவனை பின்பற்றுவோம்.

இன்றைய  கிறிஸ்தவ உலகம் சிலுவையை பற்றி போதிப்பதை விட  “நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நோயில்லாத கடனில்லாத ஆசீர்வாதமான நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்” என்று ஆசீர்வாதத்தை மட்டுமே போதித்து அழைக்கின்றன. கிறிஸ்துவுக்குள்ளாக நாம் எப்படியாய் வளர்வது, பரிசுத்தமாய் வாழ்வது எப்படி என்று உணர்த்துகிற வசனங்களை விட ஆசீர்வாத வசனங்களை தான் எங்கும் பார்க்க முடிகிறது. சிலுவையின்  போதனைகளை  நாம் கேட்பது மிக அரிது. இதனால் பரலோகத்தில்  பொக்கிஷங்களை சேர்க்க வேண்டும் என்பதை உணராமல், நம் இருதயம் பூமிக்குரிய பொக்கிஷங்களை சேர்க்க வாஞ்சிக்கிறது. இதனால் ஆசீர்வாதங்களை மட்டுமே நம்பி வரும் ஜனங்கள் உபத்திரவங்கள் பாடுகள் வரும் போது, அவைகள்  முட்களைப் போல அவர்களை நெருக்குவதால் விசுவாசத்திலிருந்து விழுந்து போக ஏதுவாய் அமைகிறது. பவுலைப் போல கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று சொல்லி சிலுவையை சுமப்போம் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்ப்போம்.

கிறிஸ்துவின் பாடு மரணத்தை இந்நாட்களில் தியானிக்கிற நாம் ஒவ்வொருவரும் சிலுவையின் மேன்மையான அழைப்பை உணர்ந்தவர்களாய் நம்மை வெறுமையாக்கி  சாத்தானின் சதிகளை முறியடித்து அனுதினமும்  சிலுவையை சுமந்து அவருக்கு சீஷராகுவோம். மற்றவர்களையும் சீஷராக்குவோம். ஆத்துமாக்களை தேவனுக்கு ஆதாயப்படுத்துவது மட்டுமல்ல புதிய சீஷர்களையும் உருவாக்குவோம். இந்த உலகத்தை தேவனுக்காய் ஆதாயப்படுத்துவோம். “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்ற கட்டளையை இயேசு கிறிஸ்து பரமேறுமுன் நமக்கு கொடுத்திருக்கிறார்.  இயேசு கிறிஸ்துவின்  சீடர்கள்  அவர்  விட்டுசென்ற பணியை செய்து நிறைவேற்றினர். இன்று இந்த பனியை செய்து நிறைவேற்ற நம்மை அழைக்கிறார். இந்த மேன்மையான அழைப்புக்கு நம்மையும் அர்ப்பணிப்போமா? நமக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை தினமும் சுமந்து சிலுவையின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைப்போம்.தேவனுடைய வருகை மிக சமீபம். ஆயத்தமாவோம் ஆயத்தமாக்குவோம். தேவனுடைய ராஜ்ஜியத்தின் பாத்திரராய் மாறுவோம்.

இயேசு கிறிஸ்துவின் நல்சீடராகுவோம்

விசுவாசத்தில் முன்நடப்போம்

இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே

ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரே

அதி வேகமாய் செயல்படுவோம்.

இந்த பாடல் வரிகள் நம் இருதயத்தில் எப்போதும் தொனித்து கொண்டே இருக்கட்டும். செயல்படும் கிறிஸ்தவர்களாய் மாறுவோம்.தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.
Tags:    

Similar News