ஆன்மிகம்
புனித சூசையப்பர்

வளன்நகர் புனித சூசையப்பர் ஆலய திருவிழா

Published On 2021-04-24 08:43 IST   |   Update On 2021-04-24 08:43:00 IST
அழகப்பபுரம் அருகே வளன்நகர் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் வருகிற 30-ந் தேதி நெடுங்குளம் பங்குத்தந்தை கிங்ஸ்டன் தலைமையில் ஆராதனையும், மே 1-ந் தேதி அருட்பணியாளர் வில்சன் தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெறும்.
அழகப்பபுரம் அருகே வளன்நகர் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. வருகிற 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நெடுங்குளம் பங்குத்தந்தை கிங்ஸ்டன் தலைமையில் மாலை ஆராதனையும், மே 1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் வில்சன் தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ரூபன் மற்றும் பங்குமக்கள் செய்து உள்ளனர்.

Similar News