ஆன்மிகம்
விழாவில் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பாடல் திருப்பலி நடந்தபோது எடுத்த படம்.

புனித உபகார அன்னை ஆலய திருவிழா - திரளானோர் பங்கேற்பு

Published On 2018-05-25 03:24 GMT   |   Update On 2018-05-25 03:24 GMT
காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா நடந்தது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு புனித உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை, திருப்பலியும், மாலையில் மறையுரை நற்கருணை ஆசீரும், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

8-ம் திருநாளன்று காலை திருப்பலியில் சிறுவர்- சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. இரவில் நற்கருணை பவனி நடந்தது. 9-ம் திருநாளன்று இரவு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு தேர் பவனி நடந்தது.

10-ம் திருநாளான நேற்று காலை தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் ஆடம்பர பாடல் திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். மாலை 3 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று 6.30 மணிக்கு ஆலய வளாகத்தை தேர் வந்தடைந்தது. தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு மைக்கிள் மகிழன் அடிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 11-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் பொது அசனம் நடக்கிறது. 
Tags:    

Similar News