ஆன்மிகம்

புனித உபகார அன்னை திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2018-05-15 03:35 GMT   |   Update On 2018-05-15 03:35 GMT
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் அடிகள் தலைமையில் நடக்கிறது. விழா 10 நாட்கள் நடக்கிறது.

விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மறையுரை, நற்கருணை ஆசீரும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஒவ்வொரு திருநாளிலும் காலை திருப்பலி ஒவ்வொரு மண்டலம் சார்பில், சிறப்பிக்கப்படுகிறது.

தொடர்ந்து 8-ம் திருநாளான வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு புதுநன்மை திருப்பலி நடக்கிறது. மாலை 7 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 9-ம் திருநாளான 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.

10-ம் திருநாளான 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு தேர்பவனியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குகுரு மைக்கிள் மகிழன் அடிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News