ஆன்மிகம்
எடப்பாடி அருகே தூய செல்வநாயகி ஆலய தேர்த்திருவிழா
எடப்பாடி அருகே வெள்ளாண்டிவலசு தூய செல்வநாயகி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது.
எடப்பாடி அருகே வெள்ளாண்டிவலசு தூய செல்வநாயகி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது.
பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் உலக மீட்பர் என்ற தலைப்பில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து உலக மீட்பர், அருளப்பர், செபஸ்தியர், தூய செல்வநாயகி சிலைகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பாடல்களை பாடியவாறு சென்றனர். முடிவில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் உலக மீட்பர் என்ற தலைப்பில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து உலக மீட்பர், அருளப்பர், செபஸ்தியர், தூய செல்வநாயகி சிலைகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பாடல்களை பாடியவாறு சென்றனர். முடிவில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.