ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

Published On 2021-04-05 03:15 GMT   |   Update On 2021-04-05 03:15 GMT
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ, தியான மைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்குத்தந்தை அருண் சவரிராஜ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பேராலயத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு் புதிதாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இந்த மெழுகுவர்த்தியை பேராலய அதிபர் பாக்கிய சாமி ஏந்தி வந்தார். அப்போது அங்கிருந்த திரளான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து இறைவார்த்தை, திருமுழுக்கு, நற்கருணை பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News