ஆன்மிக களஞ்சியம்

சிவசைலம் சிவசைலப்பர் கோவில்

Published On 2024-12-05 17:48 IST   |   Update On 2024-12-05 17:48:00 IST
  • கடனையாறு என்றழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும்.
  • மேலும் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்குக் கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அம்பாசமுத்திரத்தில் இருந்து 15-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆழ்வார்குறிச்சியின் மேற்கே 6 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் அருள்புரிகிறார்.

கடனையாறு என்றழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும்.

எழுந்து நிற்கும் நிலையிலுள்ள நந்திகேசுவரரும், பரமகல்யாணி அம்மன் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், நல்லருள் பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கக்கூடியதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு.

மேலும் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்குக் கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Similar News