ஆன்மிக களஞ்சியம்

பொங்கல் வைத்து வழிபடும் பொங்காலை விழா

Published On 2024-12-16 14:21 IST   |   Update On 2024-12-16 14:21:00 IST
  • இக்கோவிலில் நடைபெறும் பொங்காலை விழாவில் லட்சோபலட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்காலையிட்டு அம்மனை வணங்கி செல்கிறார்கள்.
  • பொங்காலை விழாவன்று இங்கு கூடுவோர் ஜாதி, மத வேறுபாடு இன்றி திறந்த வெளியில் சுத்த ஆசாரங்களை கடைபிடித்து அம்மனுக்கு பொங்கல் படையலிடுகிறார்கள்.

சர்வமங்கள மாங் கல்யே...

சிவே சர்வார்த்த ஸாதிகே...

சரண்யே த்ரயம்பகே தேவி...

நாராயணி நமோஸ்துதே...

என்ற துதிபாடி நமஸ்கரிக்கும் அன்னை ஆற்றுகால் பகவதி கேரளத்தின் தலைநகராம் திருவனந்தபுரத்தின் தென்கோடியில் உள்ள ஆற்றுகாலில் குடிகொண்டிருக்கிறார்.

இதனால் ஆற்றுகால் பகவதி என பெயர் பெற்ற இக்கோவிலுக்கு சென்று அம்மனை தொடர்ந்து வணங்கி வந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனால்தான் இக்கோவிலில் நடைபெறும் பொங்காலை விழாவில் லட்சோபலட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்காலையிட்டு அம்மனை வணங்கி செல்கிறார்கள்.

பொங்காலை விழாவன்று இங்கு கூடுவோர் ஜாதி, மத வேறுபாடு இன்றி திறந்த வெளியில் சுத்த ஆசாரங்களை கடைபிடித்து அம்மனுக்கு பொங்கல் படையலிடுகிறார்கள்.

பின்னர் அதனை ஆற்றுகால் அம்மனுக்கு படைத்துவிட்டு மன நிறைவுடன் வீடு திரும்புகின்றனர்.

Similar News