ஆன்மிக களஞ்சியம்

பொங்கல் பானையில் பஞ்சபூதங்கள்

Published On 2024-12-16 17:58 IST   |   Update On 2024-12-16 17:58:00 IST
ஆற்றுகால் பகவதி கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் மண்பானையில் அரிசி, சர்க்கரை, நெய், தேங்காய் ஆகியவற்றை பயன்படுத்தி பொங்கல் சமைக்கிறார்கள்.

ஆற்றுகால் பகவதி கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் மண்பானையில் அரிசி, சர்க்கரை, நெய், தேங்காய் ஆகியவற்றை பயன்படுத்தி பொங்கல் சமைக்கிறார்கள்.

இதன்மூலம் நீர், நிலம், நெருப்பு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் மகிழ்ச்சி அடைவதாகவும், பொங்கலிடும் பக்தர்கள் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

இதில் பயன்படுத்தப்படும் மண் பானையும், அரிசியும் நிலத்தை பிரதிபலிக்கிறது.

நீர் மற்றும் அடுப்புக்கு வைக்கப்படும் நெருப்பு, பொங்கல் பானையில் இருந்து வரும் வாயு மற்றும் அது பரவும் ஆகாயம் ஆகியவை மூலம் பஞ்ச பூதங்களும் மகிழ்ச்சி அடைவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

Similar News