ஆன்மிக களஞ்சியம்

காசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்

Published On 2024-12-05 17:46 IST   |   Update On 2024-12-05 17:46:00 IST
  • தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை மானுடர்களும் பயன்பெற எண்ணி அம்பெய்தி உடைத்தார் ஈசன்.
  • அவ்வமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரையில் பரவி ஐந்துதலங்களை உண்டாக்கியதால் “பஞ்ச குரோச ஸ்தலங்கள்” எனப்படுகின்றன.

ஏழ்மையானோர் காசிக்கு சென்றுவர வசதி இல்லை என்பதற்காகவே உருவானவை பஞ்ச குரோச தலங்கள் எனப்படுகின்றன.

குரோச என்பதற்குக் காசிக்கு நிகரான என்று பொருள்.

தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை மானுடர்களும் பயன்பெற எண்ணி அம்பெய்தி உடைத்தார் ஈசன்.

அவ்வமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரையில் பரவி ஐந்துதலங்களை உண்டாக்கியதால் "பஞ்ச குரோச ஸ்தலங்கள்" எனப்படுகின்றன.

ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும்.

திருநெல்வேலியில் 25கி.மீ தொலைவிலேயே காசிக்கு நிகரான இந்தப் பஞ்சகுரோச ஸ்தலங்களும் அமைந்துள்ளன.

Similar News