கிரிக்கெட்

ராகுல் டிராவிட் - ஷிகர் தவான்

இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்- கேப்டன் ஷிகர் தவான் நம்பிக்கை

Published On 2022-07-22 10:17 GMT   |   Update On 2022-07-22 10:17 GMT
  • வெஸ்ட் இண்டீசில் போட்டிகளை அனுபவித்து விளையாடுவோம்.
  • இங்குள்ள வானிலை கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும்.

போர்ட் ஆப் ஸ்பெயின்:

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா, கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி போர்ட்-ஆப்-ஸ்பெயினில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரடிப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் குறித்து வீரர்கள் மத்தியில் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

வெஸ்ட் இண்டீசில் போட்டிகளை அனுபவித்து விளையாடுவோம். இங்குள்ள வானிலை கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும்.

ஒவ்வொருவரும் தங்களது திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளனர். இதில் நிறைய புன்னகை, நிறைய வெற்றிகள் கிடைத்தன.

வெஸ்ட் இண்டீசில் நாம் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். நமது திறமையை வெளிப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார்.

இதற்கிடையே இன்றைய போட்டியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. அவருக்கு முழங்காலில் லேசான காயம் உள்ளதாகவும், காயத்தின் தீவிர தன்மை குறித்து மருத்துவ ஆலோசனை பெறப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News