கிரிக்கெட்
டெண்டுல்கரிடம் கோலி ஆலோசனை பெற வேண்டும்- இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் சொல்கிறார்
- யுவராஜ்சிங்குடன் கோலி பேச வேண்டும்.
- கிரிக்கெட் விளையாட்டுக்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் கோலி பேச வேண்டும்.
லண்டன்:
இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீப காலமாக ரன்களை குவிக்க திணறி வருகிறார். இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறும்போது:-
டெண்டுல்கரிடம் கோலி பேசி ஆலோசனை பெற வேண்டும். அவரை கோலி மிகவும் மதிக்கிறார். அதே போல் யுவராஜ்சிங்குடன் கோலி பேச வேண்டும். அவர்கள் இருவரும் கோலிக்கு உதவ முடியும். கிரிக்கெட் விளையாட்டுக்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் கோலி பேச வேண்டும் என்றார்.