ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் தாயார் மரணம்- கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள்
- பேட் கம்மின்சின் தாயார் மரியா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
- பேட் கம்மின்ஸ் தாயார் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட பேட் கம்மின்ஸ், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.
இதனால் அவர் 3-வது மற்றும் 4-வது போட்டிகளில் இருந்து விலகினார். கேப்டனாக ஸ்டீவன் சுமித் செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் பேட் கம்மின்சின் தாயார் மரியா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாயின் உடல் நலம் குன்றியதன் காரணமாகவே அவர் சொந்த நாட்டுக்கு திரும்பி இருந்தார். பேட் கம்மின்ஸ் தாயார் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அகமதாபாத்தில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள், கம்மின்சின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது கைகளில் கருப்பு பட்டையை அணிந்து இருந்தனர்.