கிரிக்கெட்

தனஞ்செய டி சில்வா அசத்தல் - 132 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

Published On 2023-06-04 18:42 GMT   |   Update On 2023-06-04 18:42 GMT
  • முதலில் ஆடிய இலங்கை 323 ரன்கள் குவித்தது.
  • குசால் மெண்டிஸ், கருணரத்னே அரை சதமடித்தனர்.

அம்பாந்தோட்டை:

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 78 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே 52 ரன்னிலும் அவுட்டாகினர். சதீரா சமரவிக்ரமா 44 ரன்னும், நிசங்கா 43 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஷ்மதுல்லா ஷாகிடி 57 ரன்னிலும், இப்ராகிம் ஜட்ரன் அரைசதம் அடித்து 54 ரன்னிலும் அவுட்டாகினர். ரஹ்மத் ஷா 36 ரன்னில் வீழ்ந்தார்.

அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம்ழக்க ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட் வீழ்த்தியும், 29 ரன்னும் எடுத்த தனஞ்செய டி சில்வா ஆட்ட நாயகனாக தேர்வானார்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமன் செய்தது. வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

Tags:    

Similar News