சினிமா
சி.வி.குமார் தயாரிப்பில் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ், மிர்ணாளினி ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜாங்கோ படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமாவுக்கு பல புது டைரக்டர்களை அறிமுகப்படுத்தியவர், சி.வி.குமார். இவர் அடுத்ததாக தயாரித்திருக்கும் படம் ‘ஜாங்கோ’. சதீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாகவும், மிர்ணாளினி ரவி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், சந்தானபாரதி, வேலு பிரபாகர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
“இது, அறிவியல் சம்பந்தப்பட்ட கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. டைரக்டர் அறிவழகனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த மனோ கார்த்திகேயன், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் நவம்பர் 19ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.