சினிமா
புகழின் உச்சியில் இருந்தும் நடிகைக்கு வந்த சோதனை
தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக இருப்பவருக்கு தற்போது சோதனை ஏற்பட்டு இருகிறதாம்.
தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை புகழின் உச்சியில் இருக்கிறாராம். இருந்தாலும் நடிகை தற்போது சோகத்தில் இருக்கிறாராம். அவர் நடித்த படம் ஒன்று ஐந்து முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். இந்த மாதம் நிச்சயம் ரிலீசாகும் என்றிருந்த நிலையில், மீண்டும் ஒரு முறை தள்ளிப் போயிருக்கிறதாம்.
இதற்கு முன் நடித்த படம் ஒன்று தோல்வியை சந்தித்த நிலையில், இந்தப் படத்துக்கும் தொடர்ந்து பிரச்சனை வருகிறதே என்று கவலையில் இருக்கிறாராம்.