சினிமா

வேண்டாம் என்று ஒதுங்கி, மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகை

Published On 2019-06-13 12:07 GMT   |   Update On 2019-06-13 12:07 GMT
காதலுக்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த நடிகை, தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறாராம்.
நம்பர் படத்தின் மூலம் அறிமுகமான வாரிசு நடிகை, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு முன்னணி நடிகையானாராம். பின்னர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை காதலிக்க தொடங்கினாராம். இதனால், படங்களில் நடிக்காமல் இருந்தாராம். இந்த காதல் திருமணம் வரை செல்லும் என்று எதிர்பார்த்தால் காதலில் திடீர் முறிவு ஏற்பட்டதாம்.

காதலரை பிரிந்த நடிகை தற்போது மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம். தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என்று நடித்து வருகிறாராம். மேலும் தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறாராம்.
Tags:    

Similar News