சினிமா

அரசியலில் இறங்கும் சர்ச்சை நடிகை

Published On 2019-06-01 11:53 GMT   |   Update On 2019-06-01 11:53 GMT
தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளாராம்.
பாலியல் புகார் கூறி திரையுலகை பதற வைத்த நான்கெழுத்து நடிகைக்கு மிரட்டல் வந்ததையடுத்து சென்னையில் குடியேறினாராம்.
தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அவரது புகாரில் சிக்கினார்களாம்.

அவரது வாழ்க்கை படமாகவும் உருவாகி வருகிறதாம். அந்த படத்தை தடை செய்ய சதி நடப்பதாகவும் படக்குழுவினர் குற்றம் சாட்டி உள்ளார்களாம். இந்த நிலையில் நடிகை தற்போது அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம். சமீப காலமாக நடிகைகள் பலர் அரசியலில் குதித்து எம்.பி, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி வருவதால், நடிகைக்கும் அரசியல் ஆசை வந்துள்ளதாம்.

Tags:    

Similar News