சினிமா

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய நடிகர்!

Published On 2017-10-10 15:07 GMT   |   Update On 2017-10-10 15:07 GMT
கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்தவர் சுமார் மூஞ்சி நடிகர். அதனால், யார் நடிக்கக் கூப்பிட்டாலும், ‘இதோ வர்றேன்…’ என பக்கத்து வீட்டுக்குப்
கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்தவர் சுமார் மூஞ்சி நடிகர். அதனால், யார் நடிக்கக் கூப்பிட்டாலும், ‘இதோ வர்றேன்…’ என பக்கத்து வீட்டுக்குப் போவது போல நடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடுவாராம். அதுமட்டுமல்ல, வித்தியாசமான பல கதைகளை, கேரக்டர்களை முயற்சித்துப் பார்க்க இவரை விட்டால் ஆள் கிடையாதாம். இவர் கஷ்டத்துக்குப் பலனாக, சமீபத்தில் இவர் நடித்து வெளியான 4 படங்களும் சூப்பர் ஹிட்.

எனவே, இதுவரை தான் வாங்கிவந்த சம்பளத்தை அப்படியே டபுளாக உயர்த்தி விட்டாராம். இதனால், அவரை வைத்துப் படமெடுக்க நினைத்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.
Tags:    

Similar News