சினிமா செய்திகள்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் : ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து

Published On 2022-06-09 11:37 IST   |   Update On 2022-06-09 11:37:00 IST
  • நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்றது.
  • நட்சத்திர தம்பதிகள் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200-க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த கல்யாண விருந்து வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags:    

Similar News