சினிமா செய்திகள்

பருந்தாகுது ஊர்க்குருவி

ஒரே நாளில் நடக்கும் உண்மைக் கதை - இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ்

Published On 2022-10-05 09:58 GMT   |   Update On 2022-10-05 09:58 GMT
  • இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”.
  • இப்படம் அடர்ந்த காட்டுக்குள் ஒரு நாளில் நடக்கும் பரபர சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ளது.

இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பருந்தாகுது ஊர்க்குருவி". இவர் இயக்குனர் ராம் அவர்களின் உதவி இயக்குனர் ஆவார். நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தில் காயத்திரி ஐயர் நாயகியாக நடிக்கிறார். மேலும் ராட்சசன் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லைட்ஸ் ஆன் மீடியா தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

பருந்தாகுது ஊர்க்குருவி

 

இப்படம் குறித்து இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் கூறியதாவது, கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனை தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம்.

பருந்தாகுது ஊர்க்குருவி

 

இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையை உருவாக்கியுள்ளோம். ஊட்டி முதுமலை காடுகளில் படமாக்கியுள்ளோம். மாறுபட்ட ஒரு பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும் என்றார்.

Tags:    

Similar News