சினிமா செய்திகள்

விமல்

செக் மோசடி வழக்கு.. நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம்

Published On 2023-04-18 15:58 IST   |   Update On 2023-04-18 15:58:00 IST
  • நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
  • இந்த வழக்கில் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நடிகர் விமல் நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து ரூ.4.50 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், தொகையை காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலை வங்கியில் செலுத்திய போது அவர் கணக்கில் இருந்து பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன்வரவில்லை. இதையடுத்து முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து வழக்கு விசாரணையை நீதிபதி தொடங்கினார். இதன் பின்னர், முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு கோபி தரப்பு வக்கீல் ஆர்.வெங்கடேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் தரப்பில் வாதிடப் பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விமல் மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் வழக்கு இழுத்தடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூ. 300 வழக்கு செலவு (அபராதம்) விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News