விஷால்
மீண்டும் விஷால் படப்பிடிப்பு தளத்தில் விபத்து
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது.
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மார்க் ஆண்டனி
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம், ஈவிபி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குமணன்சாவடியை சேர்ந்த முருகன் (33), என்பவர் லைட் மேனாக வேலை செய்ய வந்தபோது எதிர்பாராத விதமாக லைட் கம்பம் அவரது நெற்றியில் பட்டதில் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கடந்த வாரம் இதே படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக நடந்த விபத்தில் லைட் மேன் காயம் அடைந்தது படப்பிடிப்பு தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.