null
18 வயதில் கண்ட கனவு.. இன்று நிறைவேறி இருக்கிறது- பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்சி
- தமிழில் 'மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர்.
- தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் 'மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், யானை, மாபியா, ஓமணப்பெண்ணே, மான்ஸ்டர், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் நண்பரை காதலிப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்களையும் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் சென்னையில் தற்போது புதிய வீடு வாங்கி குடியேறி இருக்கிறார். இதுகுறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''18 வயதில் கடற்கரைக்கு சென்று இங்கே ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு மாலைபொழுதை கழித்தோம். அதன்படி இப்போது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். தனது நெற்றியில் காதலர் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவருக்கு வலைத்தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்து பதிவிட்டு வருகின்றன.