சினிமா செய்திகள்

நிலானி

ஒரு போன் காலால் வந்த வினை.. கதறும் டிவி நடிகை

Published On 2023-08-11 08:30 GMT   |   Update On 2023-08-11 08:31 GMT
  • நடிகை நிலானி பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
  • இவர் 'காதலும் கடந்து போகும்', 'நெருப்புடா', 'ஓம்' என சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நிலானி. இவர் சின்னத்திரை மட்டுமல்லாது, 'காதலும் கடந்து போகும்', 'நெருப்புடா', 'ஓம்' என சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை நிலானி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வங்கி மோசடி தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.


அதில், எனது செல்போனில் சில வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். கடன் வழங்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய அவர் குறைந்த வட்டியில் கடன் தருவதாக தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்று தான் கேட்டேன். அப்போது அவர் ஒரு லிங்க்கை அனுப்புவதாக கூறி அனுப்பி வைத்தார். அதில் சென்று பார்த்த போது வட்டி அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து நான் கடன் வேண்டாம் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டேன்.


இதன்பின்னர் ஒரு செல்போனில் இருந்து எனக்கு ரூ.8.80 லட்சம் கடன் கிடைத்திருப்பதாக தகவல் வந்தது. அதற்கான மாத தவணையாக ரூ.10,998 எடுக்கப்பட்டு உள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து என்னிடம் தொடர்பு கொண்டு பேசிய நபரிடம் போன் செய்து பேசினேன். அப்போது அவர் என்னை மிரட்டினார். நிதி நிறுவனத்தில் இருந்து பேசிய நபரின் செல்போன் எண், வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து உள்ளேன். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News