சினிமா செய்திகள்

ஆத்மிகா

null

திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆத்மிகா

Published On 2023-05-26 06:15 GMT   |   Update On 2023-05-26 10:42 GMT
  • மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.
  • சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருவின் குரல் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன்பின்னர் கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆத்மிகா சமீபத்தில் வெளியான திருவின் குரல் திரைப்படத்தில் அருள்நிதியுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார்.


ஆத்மிகா

இந்நிலையில் ஆத்மிகா திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News