சினிமா செய்திகள்

ராணா டகுபதி

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்.. செல்போனை பிடுங்கிய ராணா

Published On 2022-09-16 08:45 GMT   |   Update On 2022-09-16 08:46 GMT
  • பாகுபலி, ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ராணா டகுபதி.
  • ராணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் நடித்தும் பிரபலமானார்.

பாகுபலி

 

இந்நிலையில் நடிகர் ராணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி வரிசையில் சாமி தரிசனம் செய்தார். ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டுனர்.

 

செல்போனை பிடுங்கிய ராணா 

அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்ற போது ஆத்திரம் அடைந்த ராணா அவரின் செல்போனை பிடிங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News