சினிமா
விஷால்

குடியரசு தினத்தை குறிவைத்த விஷால்

Published On 2021-11-24 05:45 GMT   |   Update On 2021-11-24 05:45 GMT
எனிமி படத்தை தொடர்ந்து விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கு படத்தை குடியரசு தினத்தில் வெளியிட இருக்கிறார்.
எனிமி படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்க, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஐதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. 



தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி 26ம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News