சினிமா
பரியேறும் பெருமாள்

பரிதாப நிலையில் பரியேறும் பெருமாள் பட நடிகர்

Published On 2021-02-08 15:51 GMT   |   Update On 2021-02-08 15:51 GMT
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் பட நடிகர் மிகவும் பரிதாப நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ’பரியேறும் பெருமாள்’. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார்.



‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நாயகன் கதிர் தந்தையாக நடித்து இருந்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ். நெல்லையில் வசித்து வரும் தங்கராஜ், சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அவருடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. அவருடைய வீட்டை சீரமைத்து தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தினமும் சாப்பிடக் கூட கஷ்டப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News