சினிமா
சன்னி லியோன்

மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு சன்னி லியோன் கண்டனம்

Published On 2020-01-11 14:36 IST   |   Update On 2020-01-11 14:36:00 IST
ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை குறித்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் ஜே என் யு மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.



இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில், 'ஜே என் யு தாக்குதல் சம்பவம் மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களையும் அச்சப்படவைத்துள்ளது. வன்முறையை நிறுத்துமாறு நான் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். யாரையும் பாதிக்காத வகையில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்' என கூறியுள்ளார்.

Similar News