சினிமா
ஜெயம் ரவி

படத்திற்காக மொட்டை அடிக்கும் ஜெயம்ரவி

Published On 2020-01-10 10:29 GMT   |   Update On 2020-01-10 10:29 GMT
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் ஜெயம்ரவி மொட்டை அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் தற்போது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்கள் எல்லோரும் தலைமுடியை வளர்க்கவும், வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பழைய கலைகளை கற்றுக்கொள்ளவும் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக ஜெயம் ரவி மொட்டை அடிக்க இருக்கிறாராம்.



இதன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. தற்போது நடிகர் ஜெயராம், கார்த்தி, ஜெயம் ரவி மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.
Tags:    

Similar News