சினிமா
ரெஜினா

தொல்பொருள் ஆய்வாளராக களமிறங்கும் ரெஜினா

Published On 2020-01-07 13:33 GMT   |   Update On 2020-01-07 13:33 GMT
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா அடுத்ததாக தொல் பொருள் ஆய்வாளராக நடிக்க இருக்கிறார்.
திருடன் போலீஸ், உள்குத்து படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் ராஜு. இவர் அடுத்ததாக மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படத்தை இயக்க தயாராகி இருக்கிறார். இந்த புதிய படத்தில் ரெஜினா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை ஆப்பிள் டிரி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். ஜனவரி 13ம் தேதி முதல் குற்றாலத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.



படத்தின் பெரும்பான்மை காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படம்பிடிக்கப்படவுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் பர்ஸ்ட் லுக்குடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா கூறியுள்ளார்.
Tags:    

Similar News