சினிமா
பிருத்விராஜ்

அதிகம் பேசாதவர் என்றாலும் ஈர்க்கக்கூடிய ஆளுமை அவரிடம் உள்ளது - பிருத்விராஜ்

Published On 2020-01-03 11:15 GMT   |   Update On 2020-01-03 11:15 GMT
நடிகர் பிருத்விராஜ் தன்னுடைய ரசிகர்களிடம் பேசும்போது, அதிகம் பேசாதவர் என்றாலும் ஈர்க்கக்கூடிய ஆளுமை அந்த நடிகரிடம் உள்ளது என்று கூறியிருக்கிறார்.
மலையாள நடிகர் பிருத்விராஜ் தமிழில் மொழி, கனா கண்டேன், பாரிஜாதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தன் ரசிகர்களை சந்தித்து, அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த நிகழ்வில் ரசிகர் ஒருவர் விஜய் குறித்து பிரித்விராஜிடம் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பிருத்விராஜ் அளித்துள்ள பதில் தான் தற்போதைய டுவிட்டர் டிரெண்டாக இருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். விஜய் குறித்து பிருத்விராஜ் கூறியதாவது: 'நான் பல முறை விஜய் சாரை பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இந்தியாவின் மிக பெரிய நடிகர் அவர். அதாவது தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவில் பெரிய நடிகர். அவர் படங்கள் அந்த அளவுக்கு வருமானம் ஈட்டுகின்றன. அவருடைய சினிமா வெளிவரும்போது தமிழ் சினிமா வியாபாரமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.



தமிழ் சினிமா வியாபாரத்தின் ஒரு முக்கியமான கண்ணி, விஜய் சார். ஒரு பெரிய நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் கடந்த சில ஆண்டுகளாக அவரின் வளர்ச்சி என்னைக் கவரக்கூடிய விஷயமாக இருக்கிறது. தன்னுடைய இடம் என்ன, என்பதைத் தெளிவாக அறிந்து தன் சினிமாக்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வதில் மிகத் திறமையானவர் அவர். அதிகம் பேசாதவர் என்றாலும் ஈர்க்கக்கூடிய ஆளுமை அவர். அமிதாப் பச்சன் யார் என்று தெரியாதவர் இருக்கும் ஒரு சபையில் அமிதாப் பச்சன் வந்தாலும் நாம் எழுந்து நிற்கக்கூடும். அது விஜய்க்கு உண்டு''. இவ்வாறு பிருத்விராஜ் பேசியுள்ளார்.
Tags:    

Similar News