சினிமா
இயக்குனர் மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படக்குழுவினரின் திடீர் சர்ப்ரைஸ்

Published On 2020-01-02 12:37 GMT   |   Update On 2020-01-02 12:37 GMT
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். 

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கி வருகிறார். 



இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழுவினர் திடீரென்று வெளியிட்டிருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அமைந்திருக்கிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News