சினிமா
சிவகார்த்திகேயன்

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்

Published On 2020-01-02 07:07 GMT   |   Update On 2020-01-02 07:07 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். இவர்களது கூட்டணியில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனிடையே மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி ஹிட் ஆனது. 



தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News