சினிமா
வைரமுத்து

பட்டமளிப்பு விழா ரத்து - எனக்கென்ன மனக்கவலை?.... வைரமுத்து டுவிட்

Published On 2020-01-01 07:40 IST   |   Update On 2020-01-01 07:40:00 IST
பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? என வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவிற்கு ஒரு தனியார் பல்கலைகழகம் சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதற்கு பாடகி சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் திடீரென அவர் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியும் டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ரத்து செய்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில் பட்டமளிப்பு விழா குறித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவிட்டுள்ளதாவது:- எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி. இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? என தெரிவித்துள்ளார்.

Similar News