சினிமா
சிம்பு - சுரேஷ்காமாட்சி

பொங்கல் தினத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் மாநாடு படக்குழு

Published On 2019-12-31 11:04 GMT   |   Update On 2019-12-31 11:04 GMT
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பற்றிய முக்கிய அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருக்கிறார்.
சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன. இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது. 



பின்னர் சமரசமாகி மாநாடு படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

Tags:    

Similar News